×

ஆத்தனஞ்சேரி கிராமத்தில் மனுநீதி நாளில் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரும்புதூர், ஜூன் 27:  குன்றத்தூர் ஒன்றியம்  படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி கிராமத்தில் வருவாய் துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. பெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா தலைமை வகித்தார். படப்பை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் வரவேற்றார்.எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், 31 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 13 வாக்காளர் அடையாள அட்டை, 8 பட்டா உட்பிரிவு உள்பட 55 பேருக்கு   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.படப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது கலந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.



Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு