பெரும்புதூர், ஜூன் 27: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி கிராமத்தில் வருவாய் துறை சார்பில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. பெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா தலைமை வகித்தார். படப்பை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் வரவேற்றார்.எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், 31 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 13 வாக்காளர் அடையாள அட்டை, 8 பட்டா உட்பிரிவு உள்பட 55 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.படப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது கலந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.