×

விசிக பிரமுகர் மகன் மீது தாக்குதல்

ஆலந்தூர், ஜூன் 27: ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் சேகர் (55). விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூகநல பிரிவு மாவட்ட அமைப்பாளர். இவரது மனைவி காவேரி. இவர்களது மகன் ராஜ்குமார் (20).சேகர், தனது கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் சுவர் விளம்பரம் எழுதி இருந்தார்.அந்த விளம்பரத்தினை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராமதாசின் ஆதரவாளர்கள் அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது குடும்பத்துடன், அந்த வழியாக காரில் வந்த சேகர்,  அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர், சேகரை தாக்க பாய்ந்து வந்தனர். இதனை தடுக்க முயன்ற சேகரின் மகன் ராஜ்குமார் (20) என்பவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.புகாரின்படி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிமுகவினரிடம் விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...