×

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம், ஜூன் 27: உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் பொன்னையா தொடங்கி  வைத்தார். உடன் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி இருந்தார்.காஞ்சிபுரம் தேரடியில் தொடங்கிய பேரணி பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 100க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் போதைப் பொருளை ஒழிப்போம், போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்பது உள்பட போதைப் பொருளின் தீமைகள் குறித்து முழக்கமிட்டு, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.உதவி ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன், கோட்ட கலால் அலுவலர்  பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...