×

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரி துரைசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அன்பு(29). இவர் குடும்பத்தோடு கடத்தூருக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். பின்னர் மாலை திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன்நகை, ₹20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து தர்மபுரி போலீசில் அன்பு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதேபோல், தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே தேசிய மயமக்கப்பட்ட வங்கி உள்ளது. நேற்று அதிகாலை வங்கியின் சுவற்றில் ஏறி உள்ளே குதித்த வாலிபர் ஒருவர் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதனை பார்த்த வங்கி காவலாளி உடனடியாக அந்த வாலிபரை பிடித்து தர்மபுரி போலீசில் ஒப்படைத்தனார். தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிராங்கிலின் (29) என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அவர் கொள்ளையடிக்க வங்கியின் சுவர் ஏறி குதித்தாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா