×

அரூரில் பூட்டிக்கிடக்கும் சமுதாய கூடத்தை திறக்க கோரிக்கை

அரூர், ஜூன் 26: அரூர் அம்பேத்கார் நகரில், 2015-16ம் நிதியாண்டில் ர₹25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் சமுதாய கூடம் இன்னும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. திறக்கப்படுதவற்கு முன்பே வெளியில் வைத்திருந்த மின் இணைப்பு பெட்டிகள் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இப்பகுதி மக்கள் காது குத்து, சடங்கு, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக சமுதாய கூடத்தை திறந்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதுடன் பராமரிப்பும் சரியாக இருக்கும். எனவே, பூட்டிக்கிடக்கும் சமுதாய கூடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா