×

பஸ் ஸ்டாண்ட் வராமல் புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

அரூர், ஜூன் 26: அரூர் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து, பைபாஸ் வழியாக அரசு பஸ்கள் செல்வதால், காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேலத்தில் இருந்து அரூர் வழியாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை ஆகிய ஊர்களுக்கு 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்களில் சில அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் பைபாஸ் வழியாக சென்று விடுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைவதுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், பஸ்கள் காலியாக இருந்தாலும் வருவதில்லை. அதே போல் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் பஸ்களும், பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து பைபாஸ் வழியாக செல்கின்றன. எனவே அரூர் வழியாக வந்து செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா