சேலம் டவுனில் பைக் திருடிய 2 பேர் கைது

சேலம், ஜூன் 26: சேலம் டவுன் அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா (53). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டின் முன்பு, தனது பைக்கை நிறுத்தி இருந்தார். இரவில் அங்கு வந்த மர்மநபர்கள், பைக்கை திருடிச்சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மர்ம நபர்களை விரட்டி சென்றனர். அதில், ஒருவர் மக்களின் பிடியில் சிக்கினார். அவரை டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் எஸ்ஐ சீனிவாசன் விசாரணை நடத்தினார். அதில் அவர், பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே காலனியை சேரந்த விஜய் (21) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடியது, அதேப்பகுதியை சேர்ந்த முகமது உசேன் (21) என்பது தெரிந்தது. அவரை போலீசார், பொன்னம்மாபேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய், முகமது உசேன் ஆகிய இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: