×

மாற்றுப்பாதையில் அறிவிப்பு இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

உடுமலை, ஜூன் 26:உடுமலையில்  இருந்து பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் சாலையில்,  ஏரிப்பாளையத்தில் ராஜவாய்க்கால் மேல் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.  ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களாக பணி நடக்கிறது.  தற்போது பாலம் பணி முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில், ஏற்கனவே  இருந்த பழைய பாலத்தை இடிக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக வாகனங்கள்  மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாற்றுப்பாதையில் எச்சரிக்கை  அறிவிப்போ அல்லது ஒளிரும் ஸ்டிக்கரோ இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி  விபத்துக்குள்ளாகின்றன. இரவு நேரங்களில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து  விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு சொகுசு கார் ஒன்று பள்ளத்தில்  பாய்ந்தது. இரு சக்கர வாகனங்களும் அடிக்கடி பள்ளத்தில் விழுகின்றன.இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.



Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு