அவிநாசி,ஜூன்.26; அவிநாசிபுதிய பஸ் நிலையம் எதிரே ‘டாஸ்மாக் பார்’ அருகே நேற்று ஒரு ஆண்பிரேதம் கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அவிநாசி போலீசார் கூறுகையில், இறந்து கிடந்த அடையாளம் தெரியாத 50 வயதுள்ள ஆண் கட்டம் போட்ட கருநீல நிற லுங்கி அணிந்திருந்தார். வெள்ளை, சாம்பல் நிற அரைக்கை சட்டை அணிந்திருந்தார். கொலையா? தற்கொலையா? என்பது குறித்து உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும். என்றனர்.