×

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு



உடுமலை, ஜூன் 26:திருப்பூர்  மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின்பேரில், உடுமலை ஒன்றியத்தில் 38  ஊராட்சிகளில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை  கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.மடத்துக்குளம் ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி  ஆகியோர் கொழுமம், பாப்பான்குளம், மைவாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர்  எடுக்கப்படும் கிணறுகள், மேல்நிலை தொட்டிகளை ஆய்வு செய்தனர். குடிநீரில்  சுகாதாரம் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.மடத்துக்குளம் அருகே  உள்ள கடத்தூர், சோழமாதேவி, ஜோத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் ஆய்வு  நடந்தது. ஆய்வில் மடத்துக்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,  சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் முகமதுஇசாக் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு