×

மடத்துக்குளம் அரசு பள்ளி சுற்றுச்சுவரில் ஓட்டை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

உடுமலை, ஜூன் 26:மடத்துக்குளத்தில்  உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியின் சமையலறையை ஒட்டிய சுற்றுச்சுவர் சிதிலமடைந்த நிலையில்  உள்ளதால், அதில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
இந்த ஓட்டையின் வழியாக  பள்ளி நேரங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே  சென்றுவிடுகின்றனர். விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள்  பள்ளிக்குள் புகுந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளியின்  பாதுகாப்பு  கேள்விக்குறியாக உள்ளது.மடத்துக்குளம் அரசு பள்ளி  நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்நிலை நீடித்தால் மக்களை திரட்டி  பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...