×

மினி வேன் மோதி தொழிலாளி சாவு

அவிநாசி, ஜூன் 26:அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலசுப்ரமணியம்(56). விவசாய தொழிலாளி.  இவர் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம்புதூர் பகுதியில் குடியிருந்து வந்தார். இவர் கோவை அவிநாசி சர்வீஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் இவர் மீது மோதியதில் பாலசுப்ரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...