×

31அணிகள் மோதிய மாவட்ட கிரிக்கெட்: திருப்பூர் அணி வெற்றி

கோவை, ஜூன் 26: கோவையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையேயான 16 வயதிற்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.ஆர்.தேவர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மாவட்டங்களுக்கு இடையே நடக்கும் இந்த போட்டியில் 31 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.16 வயதிற்குட்பட்டோர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் 4 இடங்களில் நடந்தது. கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் கோவை மாவட்ட அணியும், திருப்பூர் மாவட்ட அணியும் மோதின. முதல் இன்னிங்சை ஆடிய கோவை அணி நிதானமான ஆட்டத்தை மேற்கொண்டாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 88.1 வது ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நம்பிக்கையளிக்கும் விதமாக ஆடிய சிபி ஏந்தல் 93 ரன் எடுத்தார். திருப்பூர் அணி தரப்பில் ஸ்ரீஹரி 52 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்தடுத்தாக திருப்பூர் அணி முதல் இன்னிங்சை துவக்கியது. நிதானமாக ஆடி ரன்குவிப்பை மேற்கொண்டது. இரண்டாவது ஆட்ட நேர முடிவில் 77.4 வது ஓவருக்கு 177 ரன் எடுத்தது. நேரமின்மையால் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படவில்லை. முதல் இன்னிங்சில் 5 ரன்கள் முன்னிலை வகித்த திருப்பூர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்திய திருப்பூர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்