×

மகளை மீட்டுத்தர கோரி தாய் போலீசில் புகார்

கோவை, ஜூன் 26: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டெய்லர் தொழில் செய்யும் 50 வயது பெண் ஒருவர் நேற்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதில், ‘‘ 22 வயதான என் மகள் கோவை புறநகரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ படித்தார். கோவை கொள்ளுபாளையத்தில் என் தம்பியின் வீட்டில் தங்கி படித்து வந்தார். படிப்பு முடிந்த பின் அவர் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். என் மகளை சில நாட்களாக காணவில்லை. என் மகளுக்கும், திருச்சியை சேர்ந்த அவருடன் படித்த மாணவி ஒருவருக்கும் நட்பு இருந்தது. இருவரும் ஒரே விடுதியில் வசித்து வந்தனர். அந்த மாணவியுடன் சில மாதம் முன் என் மகள் சென்று விட்டார். அவர் வேலைக்கு எங்கேயும் செல்லவில்லை என தெரியவந்தது. என் மகளை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி என்னிடம் வர விடாமல் செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. என் மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்கவேண்டும், ’’ என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்