மயில் வேட்டையாடியவர் கைது

சத்தியமங்கலம், ஜூன் 26: சத்தியமங்கலம் வனச்சரகத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் ஒருவர், கையில் பையுடன் சுற்றித்திரிந்ததைக் கண்டு அவரை பிடித்து சோதனை செய்த போது தோகை மற்றும் சிறகு உரித்த நிலையில் மயில் இருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர், ராமபைலூர் லட்சுமண படுகைகாடு பகுதியை சேர்ந்த  பழனிச்சாமி (45) என்பதும், அவருக்கு பக்கவாத நோய் இருந்ததால் மயில் எண்ணை எடுத்து பூசினால் நோய் குணமாகும் என்பதால் சுருக்கு வைத்து மயிலை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் பழனிச்சாமியை கைது செய்தனர்.

Related Stories: