சத்தியமங்கலம், ஜூன் 26: குடிநீர் கேட்டு பவானிசாகர் ஒன்றிய திமுக சார்பில் புஞ்சைபுளியம்பட்டி அருகே தேசிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பவானிசாகர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை கண்டுகொள்ளாமல் உள்ள அதிமுக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். தொடர்ந்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கீதா நடராஜன், பவானிசாகர் ஒன்றிய துணைச்செயலாளர் காளியப்பன், பவானிசாகர் பேருர் கழக செயலாளர் மோகன், தேசிபாளையம் ஊராட்சி செயலாளர் முரளிகுமார், துரைசாமி, திமுக நிர்வாகிகள் மற்றும் புங்கம்பள்ளி பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.