திருவெறும்பூர் அருகே காந்தளூரில் புதிய போர்வெல், 5 நீர்த்தொட்டிகள் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவெறும்பூர், ஜூன் 26: திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் காந்தளூரில் புதிய போர்வெல் மற்றும் 5 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்ப்பணிப்பணித்தார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் உள்ள காந்தளூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு தனது சொந்த நிதியில் புதிய போர்வெல் மற்றும் 5 இடங்களில் புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். அப்போது ஒன்றிய செயலாளர் குண்டூர் மாரியப்பன், கும்பக்குடி கங்காதரன், முன்னாள் கவுன்சிலர் சித்திரவேல், மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: