×

28ம் தேதி நடக்கிறது முசிறியில் இலவச லேப்டாப் கேட்டு ஆர்டிஓ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

தா.பேட்டை, ஜூன் 26: முசிறியில் அரசின் இலவச லேப்டாப் கேட்டு ஆர்டிஓ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கவில்லை. மாணவர்கள் தற்போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலையில் முன்னாள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாது என தகவல் பரவியது. இதையடுத்து 2017-18ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சுமார் 100 பேர் முசிறி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக ஆர்டிஓ கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி