×

மணப்பாறை அருகே நள்ளிரவில் துணிகரம் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை காரையும் ஓட்டிச்சென்ற மர்ம நபர்களுக்கு வலை

மணப்பாறை, ஜூன் 26: மணப்பாறை அருகே வீடு புகுந்து நகை, பணம், கார், செல்போன் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மணப்பாறை இந்திராநகரை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி யாஸ்மின். மகன் சுகைல். அப்பாஸ் வையம்பட்டி ஆசாத் ரோட்டில் கார் மெக்கானிக் பட்டறை வைத்துள்ளார். இதனால் மனைவி, குழந்தையுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மணப்பாறைக்கு குடும்பத்துடன் வந்த அப்பாஸ் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி, குழந்தையை மட்டும் வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு அப்பாஸ் மெக்கானிக் செட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டுக்கு வந்த யாஸ்மின் வீட்டை பூட்டிவிட்டு காற்றுக்காக மொட்டை மாடியில் மகனுடன் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் யாஸ்மின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து பீரோவிலிருந்த 5 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ெராக்கம், டேபிளில் இருந்த கார், டூவீலர் சாவி மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அப்பாஸின் காரில் தப்பிச்சென்றுவிட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டுக்கு வந்த அப்பாஸ் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது நகைகள், பணம், கார் கொள்ளைபோனது தெரியவந்தது.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆசாத் ரோடு திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ளது. இதனால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் அப்பாஸ் கார் சென்றது பதிவாகியுள்ளதா என சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இதேபோல் மறவனூர் அருகே கொள்ளை கும்பல் நேற்று முன்தினம் இரவு லாரியை மறித்து டிரைவரிடம் ரூ.18 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் லாரி டிரைவர் இதுவரை புகார் அளிக்கவில்லை என தெரிகிறது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ