ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருச்சி, ஜூன் 26: திருச்சி மாவட்ட ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.சங்க தலைவர் (பொ) வெங்கடாசலம் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பாலன் வரவேற்றார். செயலாளர் முத்தையன், பொருளாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆண்டு ஊதிய உயர்வுக்கு முதல்நாள் பிற்பகல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு, ஓய்வூதியத்தில் கருத்தியலாக சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசு 31.12.14 மற்றும் 25.4.18ம் ஆண்டுகளில் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட ஒரு அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்றவர்களுக்கு பயன்கள் அனுமதிக்கப்படுவதில் முரண்பாடுகள் இருப்பதாக அறியப்படுவதால் அரசு உகந்த தெளிவுரை வெளியிட வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணை செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார்.

Related Stories: