இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

முத்துப்பேட்டை, ஜூன்26: முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி முனியம்மாள்(26). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்பொழுது முன்விரோதம் காரணமாக அங்கேவந்த அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரப்பன்(27) என்பவர் முனியம்மாளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அங்கே கிடந்த கட்டையால் தாக்க முயன்றுள்ளார்.அப்பொழுது முனியம்மாள் சத்தமிட்டு கூச்சலிட்டதும் அங்கிருந்து வீரப்பன் தப்பினார். இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் எஸ்ஐ துரைப்பாண்டி வழக்கு பதிவு செய்து முனியம்மாளை தாக்கிய வீரப்பனை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: