மன்னார்குடி, ஜூன் 26: மன்னார்குடியில் ரூ 54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத் துவமனை கட்டிடத்தை சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்திற்குள் கால்நடை மருத்துவமனைக்கு ரூ 54 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட ப் பட்டது. புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ள கால்நடை மருத்துவ மனையில் அல்டரா சவுண்ட், நோய் ஆய்வகம், அனைத்து வகை கால்நடைகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை கூடம் போன்றவை அமைந்துள்ளது.