பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், ஜூன் 26: பாசன வாய்க்கால்களை தூர் வாராமலேயே தூர் வாரியதாக கூறிவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நீடாமங்கலம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாரதிமோகன் தலைமையில் நேற்று பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன்,இந்திய கம்யூகிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 201718ம் ஆண்டு நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் அதங்குடி, ஒளிமதி, தேவங்குடி ,மேலாளவந்தச்சேரி, சாமந்தான் காவேரி,கப்பலுடையான், பாமனியாறு,உள்ளிட்ட பகுதிகளில் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர் வாருவதற்காக திருவாரூர் மாவட்ட செயற்பொறியாளர் மற்றம் துறை அதிகாரிகளால் தூர்வாருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு தூர் வாரப்படாமல் தூர்வாரும் பணி நடைபெறாமல் பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்படுவதை கண்டித்தும் பாசன வடிகால் வாய்க்கால்களை பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கொண்டகுழு அமைத்து பொது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: