×

மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசுப்பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவர்களை பெருமைப்படுத்தும் விதமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஏஞ்சலின் ஜோனத்தன் இறைவழிபாட்டோடு நிகழ்ச்சி துவங்கியது.

பள்ளி முதுநிலை முதல்வர் ஜோனத்தன் வரவேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் நினைவுப்பரிசினை வழங்கியும் கவுரவித்தார்.விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் பேசினார். பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் குமரேஷ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாரதிராஜா, ஒருங்கிணைப்பாளர் வரலட்சுமி, கிருபா ஜெபராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ