×

பொதுமக்கள் திரண்டனர் விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டுநீர் பாசனம் குறித்து ஆலோசனை

பொன்னமராவதி, ஜூன்26: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானிய விலையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பது பற்றிய விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனத்தை மானியத்தில் அமைப்பது மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பாசனம் செய்வதால் ஏற்படும் சிறு குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் சொட்டு நீர் பாசனத்தை பதிவு செய்ய வழிமுறை ஆகியன குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தோட்டக்கலை துறை இயக்குனர் தினவர்மன் உதவி அலுவலர்கள் மணி, கார்த்திக், கன்னியா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.இதில் கண்டியாநத்தம் விவசாய கூட்டுப் பொறுப்புக்குழு செயலாளர் சந்திரன், பொருளாளர் மோகன் மற்றும் விவசாயிக்குழு நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு