×

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமன முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 26: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டு உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்வதில் உள்ள முறைகேடுகளை கண்டிப்பது, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அதிகார அத்துமீறலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வின்சென்ட் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...