×

குடிநீர் பிரச்னை குறித்து அரசுப் பள்ளியில் ஆய்வு

ராஜபாளையம், ஜூன் 26: ராஜபாளையம் அருகே, சேத்தூரில் உள்ள சேவுகப் பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவியரிடம் குடிநீர் பற்றாக்குறை உள்ளதா என கேட்டறிந்தார். மாணவ, மாணவியர் கூடுதல் தண்ணீர், கழிப்பறை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொ) நடராஜனை சந்தித்து, அரசு பள்ளிக்கு நகராட்சி சார்பாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் முருகன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சர்வேஸ்வரன், ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆசிரியர்கள், நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், மாணவ மாணவியர்கள் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...