×

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.78 லட்சம் மோசடி சென்னையைச் சேந்தவருக்கு வலை

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் அருகே, ராமகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகன் கருப்பசாமி, பொறியியல் பட்டதாரி. இவருக்கு சென்னை விமானநிலையத்தில், சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக, அங்கு வேலை செய்யும், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த பத்மநாபன் வேல்முருகனிடம் தெரித்துள்ளார். இதற்கு முன்பணமாக கடந்த 25.8.18ல் ஆர்.ஆர்.நகரில் வைத்து, பத்மநாபனிடம் ரூ.50 ஆயிரம் வேல்முருகன் கொடுத்துள்ளார். அதன்பின் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை பத்மநாபன் வங்கி கணக்கில் வேல்முருகன் செலுத்தியுள்ளார்.ஆனால், கூறியபடி பத்மநாபன் வேல்முருகனின் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. மேலும், பணத்தையும் திரும்பி தரவில்லை. இது குறித்து வேல்முருகன் விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண் 1) மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி பத்மநாபனை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...