×

குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளை மிரட்டும் வடமலைக்குறிச்சி சாலை

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் அருகே, குண்டும் குழியுமாக வடமலைக்குறிச்சி சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் வடமலைக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராம சாலை வழியாக மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டிக்கு தினசரி 8 முறை பஸ் இயக்கப்படுகிறது. கலைஞர் நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி, மீனாட்சிபுரம், வடலைக்குறிச்சி கிராமங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.விருதுநகர் முதல் வடமலைக்குறிச்சி இடையே நூற்றுக்காண புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன.இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விருதுநகர்-வடலைக்குறிச்சி சாலை பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களுக்கு சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரிவதில்லை. பகல், இரவு நேரங்களில் இந்த சாலையில் வேகமாக செல்லும்போது நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து தினசரி விபத்திற்குள்ளாகி வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் வடமலைக்குறிச்சி ரோட்டை முழுமையாக போடுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...