×

மணல் கடத்திய 2 பேர் கைது

திருக்கோவிலூர், ஜூன் 26 திருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் வேடியப்பன் (45), சின்னத்தம்பி மகன் பழனிமுத்து (47) ஆகிய இருவரும் அனுமதியின்றி இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா கால் யூனிட் மணலுடன் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை