புகையிலை பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது

கோவில்பட்டி, ஜூன் 26:கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் பைபாஸ் ரோடு கூடுதல் பேரூந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து வாலிபர் 2 மூடைகளுடன் வந்திறங்கினார். பின்னர் அவர் ஆட்டோவிற்காக காத்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், கோவில்பட்டி சீனிவாச அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ஆறுமுகச்சாமி மகன் சண்முகவேல் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 2 மூடைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் 200 இருந்தது தெரியவந்தது. சண்முகவேலுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: