சாத்தான்குளம், ஜூன் 26:சாத்தான்குளம் அருகே தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பிரிட்டா ஜெனட் (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ம்தேதி பிரிட்டா ஜெனட் வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிரிட்டா ஜெனட் பலத்த காயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் எஸ்.ஐ சுரேஷ்குமார் வழக்கு பதிந்தார். திருமணமாகி நான்கரை ஆண்டுகளே ஆவதால் நெல்லை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.