ஏரல் சிவன் கோயில் அருகில் ஆபத்தான மின்கம்பம் மாற்றம்

ஏரல், ஜூன் 26: ஏரல் சிவன் கோயில் அருகில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது. ஏரலில் பஸ்நிலையம் செல்லும் சாலையில் சிவன் கோயில் அருகில் சாக்கடை கால்வாய் ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாததனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள இரும்பிலான மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி வளைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.ஏரல் மின் அலுவலக உதவி பொறியாளர் முஜ்பூர் ரகுமான் உத்தரவின் பேரில் நேற்று போர்மென் பாலசுந்தர், மின்பாக ஆய்வாளர்கள் ஜெயசங்கர், பரமசிவம், கம்பியாளர்கள் வடிவேல், அக்னிமுத்து, சவுந்தர், செல்லத்துரை, உதவியாளர் சாமுவேல் ஆகியோர் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் நட்டினர். இதேபோல் அரசும் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைத்து விபத்து ஏற்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: