செய்துங்கநல்லூர் சாலையில் அபாய வளைவை சீரமைக்க வேண்டும்

செய்துங்கநல்லூர், ஜூன்26:  செய்துங்கநல்லூரில் விபத்து உண்டாகும்அபாய வளைவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்துங்கநல்லூரில் உள்ள  நெல்லை - திருச்செந்தூர் சாலையில் தற்போது விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக  மகராஜநகர்  3 வதுமெயின் ரோட்டில் நிலஎடுப்பு  தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த  அலுவலர் செய்துங்கநல்லூர் உள்பட சாலை ஓரங்களில் உள்ள இடங்களை கையகப்படுத்தி வருகிறார். இதற்கான நோட்டீஸ் முறப்பநாடு சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் நுழையும் இடத்தில் மோசமான வளைவு சாலை ஒன்றுள்ளது. இந்த ஆபத்தான வளைவை  மாற்றாமல் அப்படியே  புதிய சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இது பயணிகள் இடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த பொன்னுசாமி கூறியதாவது, தற்போது நெல்லை திருச்செந்தூர் சாலையை  அகலபடுத்த நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.   செய்துங்கநல்லூர் கருவேலங்குளம் குளத்து கரையில் உள்ள வளைவை சீர் செய்ய வில்லை.  இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர். எனவே உடனடியாக  வளைவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  இதுகுறித்து  செய்துங்கநல்லூளர் தென்னஞ்சோலையை சேர்ந்த வீரமணி தலைமையில் சமூக  ஆர்வலர்கள்  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Related Stories: