பெண்ணை தாக்கிய 6பேர் மீது வழக்கு

உடன்குடி,ஜூன்26:  மெஞ்ஞானபுரம் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண்ணை தாக்கியதாக தாய், மகள்கள் உள்ளிட்ட 6பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெஞ்ஞானபுரம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகள் ரேவதி(50). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அங்குள்ள ஆரோன் தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் விறகு சேகரிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று விறகு சேகரிக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த வேல்குமார் மனைவி கிளித்தாய் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ரேவதி தாக்கப்பட்டார். புகாரின்பேரில் கிளித்தாய் மற்றும் அவரது மகள்கள் மீனா, செல்வராணி, உஷா, பவானி மற்றும் மகன் வினோத் ஆகிய 6பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: