தொழிலாளியிடம் பணம் திருடிய பெண் கைது

தூத்துக்குடி, ஜூன் 26:தூத்துக்குடியில் தொழிலாளியிடம் இருந்து பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜன்(59). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ராஜன் பையில் இருந்த ரூ.500யை திருடி உள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் தட்டப்பாறை செட்டியூரணியைச் சேர்ந்த உசேன் மனைவி மாரியம்மாள் (45) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து பணத்தை மீட்டனர்.

Related Stories: