×

அம்பையில் மரத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு


அம்பை,   ஜூன் 26:  அம்பையில் சாலையோரத்தில் மரத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர்.  அம்பை - ஆலங்குளம் சாலையின் இருபுறமும்   100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன. இதில் சாலையின் குறுக்கே செல்லும்   நதியுன்னி கால்வாய் அருகே  அடிபாகத்தில் இடைவெளி உள்ள மருதமரம் உள்ளது. இந்த பச்சை மரத்தை கீழே விழச்செய்ய மரத்தின் அடிபாகத்தில் மர்மநபர்கள் தீ   வைத்துள்ளனர். தகவலறிந்த அம்பை தீயணைப்பு மற்றும் மீட்புதுறை அதிகாரி   கார்த்தீஸ்வரன் தலைமையில் குமாரசாமி, செண்பகராஜ், முருகமணி, விஸ்வநாதன்   உள்ளிட்ட வீரர்கள் விரைந்து சென்று மரத்தின் உட்பகுதி வழியாக பரவிய தீயை மேலும் பரவவிடாமல்   தடுத்து அணைத்தனர். மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைதுறைக்கு  தகவல் தெரிவித்து   மரத்தின் அடிபாகத்தில் மண் நிரப்ப கூறிச் சென்றனர்.

Tags :
× RELATED அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது