×

திருவேங்கடம் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள்

திருவேங்கடம், ஜூன் 26: திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் கிராம கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி, மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் கடந்த 19ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடந்தது. 1000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 10 பேருக்கு ரேஷன் கார்டுகள், 24 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேருக்கு உழவர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் பாஸ்கரன், தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலைமுருகன், மண்டல துணை தாசில்தார் புஷ்பாராணி, சமூக நலப்பிரிவு தாசில்தார் திருநாவுக்கரசு, தேர்தல் துணை தாசில்தார் அப்துல்சமது, வட்ட வழங்கல் அலுவலர் ஹரிஹரசுப்பிரமணியன், சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் செல்வநாயகம், கலெக்டர் அலுவலக மேலாளர் மேலாளர்(குற்றவியல்) ஹபிபூர் ரகுமான், நேர்முக உதவி இயக்குநர் (வேளாண்மை) திருமலைச்சாமி, புள்ளியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன், குருவிகுளம் ஏபிடிஓ சபரிநாதன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் வாணி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆழ்வார்சாமி, மற்றும் ஆர்ஐ, விஏஓக்கள், தலையாரிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது