×

4 கோடி சீட்டு பணம் மோசடி வேலூர் எஸ்பியிடம் புகார்

வேலூர், ஜூன் 26:4 கோடி சீட்டு பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி 22 பேர் நேற்று வேலூர் எஸ்பியிடம் மனு அளித்தனர். ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்த குமார் என்பவர் உள்பட 22 பேர் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி பிரவேஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஆற்காட்டில் கோபால் என்பவர் ஏலச்சீட்டு, ரியல் எஸ்டேட் ஆகியவற்றை நடத்தி வந்தார். இதில் நாங்கள் 22 பேரும் ஏலச்சீட்டு, வீட்டுமனை வாங்குவது ஆகியவற்றுக்காக மொத்தம் ₹4 கோடி வரை முதலீடு செய்துள்ளோம். இந்நிலையில் சீட்டு முடிந்தபிறகும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதைத்தொடர்ந்து அவர் நடத்தி வந்த தனியார் கம்பெனியை மூடிவிட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார். எனவே, எங்கள் பணத்ைத மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆற்காடு டவுன் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...