ஆத்தூர், ஜூன் 25: ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த மக்கள், குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் 5வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தாண்டவராயபுரம் கிராம ஊராட்சியின் மூலம் விநிோயகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில வாரங்களாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை, ஒன்றிய அலுவலகத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், காலிகுடங்களுடன் ராசிபுரம்- ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.