விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கல்

சேலம், ஜூன் 25: விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தரைத்தளம் மற்றும் உள் கட்டமைப்பு போன்றவை சீராக, போதிய வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை சீரமைத்து, உள் கட்டமைப்பை மேம்படுத்த, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார், விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் வழங்கினர்.

Related Stories: