×

பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, ஜூன் 25:  திருச்செங்கோடு வட்டாரத்தில், நுண்நீர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஏ.இறையமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திடலில், வரும் 27ம் தேதி(வியாழன்) காலை நடைபெறுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகள் பயன்பெற நுண்ணீர் பாசனம் அமைக்க கணினி சிட்டா, இரண்டு புகைப்படம், அடங்கல் நில வரைபடம், ஆர் அட்டை, சிறு குறு விவசாயி சான்று, ஸ்மார்ட் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு