ஆணையர் எச்சரிக்கை வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருவையாறு, ஜூன் 25: திருவையாறு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.திருவையாறு அடுத்த காருகுடியை சேர்ந்த நாகராஜன் மகன் இளங்கோவன் (25) இவர் சம்பவத்தன்று திருவையாறு காவிரி ஆற்றுபாலம் அருகே நடந்து சென்றார். அப்போது பொன்னாவரையை சேர்ந்த ஆனந்த (28) என்பவர் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.

Related Stories: