திருவையாறு, ஜூன் 25: திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் உஷாராணி பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். உடற்கல்வி ஆசிரியை செல்வராணி பேசினார். சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது.