×

மின்மோட்டார் மூலம் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

ராஜபாளையம், ஜூன் 25: ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) நடராஜன் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் கோடை கால நீர்த்தேக்கம், திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து நீர்வரத்து குறைந்துள்ளது. சீரான தடையில்லா குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க நகராட்சி அலுவலர்கள் அடங்கிய 7 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால், குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படுவதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்