×

28 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் நலத்திட்ட உதவி

திருப்பூர், ஜூன் 25:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப் பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், ஊத்துக்குளி, காங்கயம் ஆகிய வட்டங்கனைச் சேர்ந்த 28 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.3.36 லட்சம் மதிப்பிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக டிரைவர் சின்னராஜ் விபத்தின்றி பணி நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் 4 கிராம் தங்கப்பதக்கத்தை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...