×

பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

பந்தலூர்,  ஜூன் 25: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மின்சாரம்  தாக்கி ஆண் யானை பலியானது.  நீலகிரி மாவட்டம் பந்தலுாரை அடுத்த சேரம்பாடி வனசரகத்திற்கு உட்பட்ட கோரஞ்சால் பகுதியில் ஏராளமான குடியிருப்பு உள்ளது. இங்கு அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து  கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற சேரம்பாடி  ரேஞ்சர் சின்னத்தம்பி, பறக்கும் படை ரேஞ்சர் கணேசன், ஏ.சி.எப். விஜயன் மற்றும்  வேட்டைத்தடுப்பு காவலர்கள் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு  ஆய்வு செய்தனர். அப்போது இப்பகுதியில் உள்ள செய்தலவி (70) என்பவரது தோட்டத்தில் புகுந்த யானை தேட்டத்தில்  மின்கோபுரம் பகுதியில் காய்ந்த மரத்தை உடைத்துள்ளது. அப்போது மரம் உயர் மின்னழுத்த  மின்கம்பியில் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி யானை இறந்தது தெரியவந்துள்ளது.   
மேலும் வனவிலங்கு ஆர்வலர் மோகன்ராஜ்  முன்னிலையில் ஓவேலி கால்நடை மருத்துவர் பரத்ஜோதி மற்றும் சேரம்பாடி  கால்நடை மருத்துவர் ஜீவா ஆகியோர் இறந்த யானையின் உடலை உடல் கூறு பரிசோதனை செய்து யானையின் உடலை அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.

Tags : Bandalur ,
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...