×

கொடுமுடி அருகே ரூ.5 லட்சம் நகை பணம் கொள்ளை

கொடுமுடி ஜூன் 25:  கொடுமுடி அருகே காரில் வந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் ரூ. 5 லட்சம் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தெற்கு புதுப்பாளையத்தில் உள்ள ஈரோடு கொடுமுடி மெயின்ரோட்டில் மாரியம்மன்கோயில் எதிரே வசிப்பவர்கள் பெரியசாமி(61) செல்லாத்தா(52) தம்பதியினர். இவர்கள் தாமரைப்பாளையத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக மளிகை கடைவைத்து நடத்தி வருகின்றனர்.இவர்களது மகள்களுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.நேற்று காலை 9.30 மணிக்கு பெரியசாமி தம்பதியினர் தாமரைப்பாளையத்தில் உள்ள தங்களது மளிகைகடைக்கு வியாபாரம் செய்வதற்கு சென்றுவிட்டனர். ஈஸ்வரி கூலிவேலைக்கு சென்றுவிட்டார். ராஜ்குமார் வழக்கம்போல் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இவர்கள் சென்ற பின்னர் காலை 10.30 மணி அளவில் மெயின்ரோட்டில் உள்ள இவர்களது வீட்டிற்கு காரில் வந்த இரண்டுபேர் பெரியசாமியின் வீட்டின்  கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோக்களை உடைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த பொருட்கள் மற்றும் அந்த அறையிலிருந்த கட்டில் மெத்தைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தாலிக்கொடி, இரண்டு பவுன்மோதிரம்,  மூன்றுதோடுகள், ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். புகாரின்பேரில், அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து   அருகிலிருந்த கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கொண்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery ,Kodumudi ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!