அந்தியூர், ஜூன் 25: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ரூ. 52 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடப்பது வழக்கம். நேற்று முதன்முதலாக பருத்தி ஏலம் துவங்கியது. இதில் 2500 பருத்தி மூட்டைகள் ஏல விற்பனைக்கு வந்திருந்தன. கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ 52.19 முதல் அதிகபட்சமாக ரூ. 57. 79 வரை ரூ. 42 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 19 ஆயிரம் தேங்காய்கள் வந்திருந்தது. இதில் சிறிய தேங்காய் ரூ. 3.70 முதல் பெரிய தேங்காய் ரூ. 11.50 வரை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு 84 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்ததில், கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ. 75.69 முதல் ரூ. 87.69 வரை ரூ. 1 லட்சத்து 81ஆயிரம் ரூபாய்க்கும், எள் 26 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.