அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 42 லட்சத்திற்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர், ஜூன் 25:   ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ரூ. 52 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடப்பது வழக்கம். நேற்று முதன்முதலாக பருத்தி ஏலம் துவங்கியது. இதில் 2500 பருத்தி மூட்டைகள் ஏல விற்பனைக்கு வந்திருந்தன.  கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ 52.19 முதல் அதிகபட்சமாக ரூ. 57. 79  வரை ரூ. 42 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.  19 ஆயிரம் தேங்காய்கள் வந்திருந்தது. இதில் சிறிய தேங்காய் ரூ. 3.70 முதல் பெரிய தேங்காய் ரூ. 11.50 வரை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு 84 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்ததில், கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ. 75.69 முதல் ரூ. 87.69 வரை ரூ. 1 லட்சத்து 81ஆயிரம் ரூபாய்க்கும், எள் 26 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

இது கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூபாய் 102.39 முதல்  அதிகப்பட்சம் ரூ. 109.19  வரை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்திற்கும், மக்கா சோளம் 3 மூட்டைகள் விற்பனைக்கு வந்ததில் கிலோ ஒன்று ரூ.21.89க்கு ரூபாய் 3 ஆயிரத்திற்கும் என  மொத்த வேளாண் விளைபொருட்கள் ரூ. 52 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த வேளாண் விளைபொருட்களை அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், மைக்கேல் பாளையம், செல்லம்பாளையம், பச்சாபாளையம், செம்புளிச்சாம் பாளையம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கோவை, திருப்பூர், அவிநாசி, பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இதனை வாங்கி சென்றனர்.

Related Stories: