×

தரமற்று கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் அகற்றம் கலசபாக்கம் அருகே பரபரப்பு

கலசபாக்கம், ஜூன் 25: கலசபாக்கம் அருகே தரமற்று கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினர். கலசபாக்கம் அடுத்த கிடாம்பாளையம் கிராமத்தில் ₹8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இக்கட்டிடம் தரமற்று கட்டுவதாகவும், இவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் இரவு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்த தகவல்களை எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பினர்.

இந்நிலையில், எம்எல்ஏ பன்னீர்செல்வம் நேற்று அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது, தரமற்ற கட்டிடத்தை அடியோடு இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட நிர்வாகமும் கட்டிடத்தை அகற்றிவிட்டு, வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நேற்று அங்கன்வாடி கட்டிடத்தை ேஜசிபி மூலம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அகற்றினர்.

Tags : building ,Anganwadi ,Kalasakkam ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி